எரிபொருளின் விலைகள் மீண்டும் குறைப்பு

எரிபொருளின் விலைகள் நான்காவது முறையாக மீண்டும் இன்று நள்ளிரவு முதல் குறைக்கப்படுகிறது
அமுலுக்கு வரும் வகையில் எரிபொருளின் விலை குறைக்கப்பட்டுள்ளது.
எரிபொருள் விலைகளில் திருத்தங்களை மேற்கொள்ளும் விலை நிர்ணய குழு இன்று நிதி அமைச்சர் மங்கள சமரவீர தலைமையில் கூடியது.இதன்போது விலைசூத்திரத்திற்கு அமைய எரிபொருளின் விலையை குறைக்க தீர்மானிக்கப்பட் நிதி அமைச்சு தெரிவித்துள்ளது.

இதற்கமைய 125 ரூபாவிற்கு விற்பனை செய்யப்பட்ட ஒக்டேன் 92 வகை பெற்றோல் லீற்றர் ஒன்றின் புதிய விலை 123 ரூபாவாகும்.
149 ரூபாவிற்கு விற்பனை செய்யப்பட்ட ஒக்டேய்ன் 95 ரக பெற்றோல் 147 ரூபாவிற்கு விற்பனை செய்யப்படவுள்ளது.
101 ரூபாவிற்கு விற்பனை செய்யப்பட்ட ஒட்டோ டீசல் 99 ரூபாவிற்கும் 121 ரூபாவிற்கு விற்பனை செய்யப்பட்ட சுப்பர் டீசல் 118 ரூபாவிற்கும் விற்பனை செய்யப்படவுள்ளது. 
ஒக்டேன் 92 மற்றும் 95 வகை பெற்றோலின் விலை 2 ரூபாவினாலும் ஒட்டோ டீசலின் விலை 2 ரூபாவினாலும் சூப்பர் டீசலின் விலை 3 ரூபாவினாலும் குறைக்கப்பட்டுள்ளதாக நிதி அமைச்சு குறிப்பிட்டுள்ளதாக நிதி அமைச்சு தெரிவித்துள்ளது..