களனிப் பல்கலைக் கழகத்தில் தைப்பொங்கல் நிகழ்வு

(யதுர்சன் )
களனிப் பல்கலைக் கழக தமிழ் மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் வருடாந்த தைப்பொங்கல் விழா களனிப் பல்கலைக் கழக மைதானத்தில்  (15/01/2018) காலை 7 மணியளவில் சிறப்பான முறையில் இடம்பெற்றது.

 இந்நிகழ்வில் சகோதர இன மாணவர்களும் கலந்து சிறப்பித்தனர். இதன்போது பொங்கல் பொங்கப்பட்டு சூரியனுக்கு படையல் செய்து பூஜை செய்யப்பட்டது. பின்னர் தைப்பொங்கலை சிறப்பிக்கும் வண்ணம் கலாசார விளையாட்டுக்களும் நடைபெற்றன.