மட்டிக்களி தமிழ் வித்தியாலய வருடாந்த விளையாட்டு போட்டி நிகழ்வு

   


மட்டக்களப்பு மட்டிக்களி தமிழ் வித்தியாலய வருடாந்த விளையாட்டு போட்டிகள் நேற்று  நடைபெற்றது .

மட்டக்களப்பு கல்வி வலயத்திற்குட்பட்ட மட்டக்களப்பு மட்டிக்களி தமிழ் வித்தியாலயத்தின் வருடாந்த விளையாட்டு போட்டிகள் பாடசாலை அதிபர் சகஸ்ரநாமம் தலைமையில் நேற்று  பிற்பகல் பாடசாலை மைதானத்தில் நடைபெற்றது


விளையாட்டு போட்டி நிகழ்வுக்கு பிரதம விருந்தினராக மட்டக்களப்பு மண்முனை வடக்கு கோட்டக்கல்விப் பணிப்பாளர் எ .அருள்பிரகாசம் கலந்துகொண்டார்

ஆரம்ப நிகழ்வாக பாடசாலை மாணவர்களால் அதிதிகளுக்கு மலர் மாலை அணிவித்து மைதானத்திற்கு அழைத்து வரப்பட்டனர்,

அதனை தொடர்ந்து தேசிய கொடி, பாடசாலை கொடி ஏற்றப்பட்டு தேசிய கீதம் இசைக்கப்பட்டதுடன் .விளையாட்டு நிகழ்வினை ஆரம்பிக்கும் முகமாக மாணவ தலைவர்களால் ஒலிம்பிக் சுடர் ஏற்றப்பட்டு, மாணவ தலைவர்களின் சத்திய பிரமாண நிகழ்வு இடம்பெற்றது .

விளையாட்டு நிகழ்வுகளில் சிறுவர்களின் வினோத விளையாட்டு நிகழ்வுகளும் பாடசாலை மாணவர்கள் , பாடசாலை பழைய மாணவர்கள் , பெற்றோர்கள் , பாடசாலை ஆசிரியர்கள் ஆகியோரின் விளையாட்டு நிகழ்வுகளும் இடம்பெற்றது,

இறுதி நிகழ்வாக விளையாட்டு போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசில்களும், சான்றிதழ்களும், வழங்கப்பட்டு விளையாட்டு நிகழ்ச்சிகள் சிறப்பாக நிறைவு பெற்றது.

இந்நிகழ்வில் , அதிதிகளாக மாமாங்கம் ஸ்ரீ மாமாங்கேஸ்வரர் வித்தியாலய அதிபர் வி .முருகதாஸ் ,ஊரணி சரஸ்வதி வித்தியாலய அதிபர் எம் . யோகானந்தராஜா ,ஆசிரியர் ஆலோசகர் முறைசாராக்கல்வி எம் .மோகனதாஸ் மற்றும் பாடசாலை ஆசிரியர்கள் , மாணவர்கள் ,பெற்றோர்கள் ,பாடசாலை அபிவிருத்தி குழு உறுப்பினர்கள் ,ஆகியோர் கலந்துகொண்டனர்