மண்டூர் பிரதான வீதியில் விபத்து ; இருவர் வைத்தியசாலையில் அனுமதி


(மண்டூர் ஷமி)

வெல்லாவெளி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மண்டூர் பாலமுனை பிரதான வீதியில் இடம்பெற்ற விபத்தில் இருவர் படுகாயம் அடைந்த சம்பவம் இன்று பிற்பகல் இடம்பெற்றுள்தாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்

சம்பவம் பற்றி மேலும் தெரியவருவதாவது

மண்டூர் பிரதேச வைத்தியசாலையில் இருந்து மேலதிக சிகிச்சைக்காக கல்முனை ஆதாரவைத்தியசாலைக்கு நோயாழி ஒருவரை ஏற்றிச்செல்லும் அவசர விபத்து வாகனத்தோடு பிரதான வீதியூடாக முன்நோக்கி வந்திருந்த மோட்டார் சைக்கிள் வேகக்கட்டுப்பாட்டடை இழந்து நேருக்கு நேர் மோதியதில் இவ்விபத்து இடம்பெற்றுள்ளது.

சம்பவத்தில் படுகாயம் அடைந்த இரு இளைஞர்கள் மணடூர் பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர். கடந்த சில காலங்களாக சம்பவம் இடம் பெற்ற பிரதான வீதியில் பல விபத்து சம்பவங்கள் இடம் பெற்று பலர் உயிர் இழந்த சம்பவங்கள் இடம் பெற்றமை குறிப்பிடதக்கது.

சம்பவம் சம்மந்தமான விசாரணைகளை வெல்லாவெளி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.