பட்டிருப்பு மத்திய மகாவித்தியாலயத்தில் சாரணர் பேரியக்கத்தின் தந்தை பேடன் பவல் ஞாபகார்த்த தினத்தையொட்டி நிகழ்வுகள் இடம்பெற்றது


( எம்.ஐ.எம்.அஸ்ஹர்)

சாரணர் பேரியக்கத்தின் தந்தை பேடன் பவல் ஞாபகார்த்த தினத்தையொட்டிய நிகழ்வுகள் பட்டிருப்பு மத்திய மகாவித்தியாலயம் ( தேசிய பாடசாலை ) களுவாஞ்சிகுடி மாணவர்களால் இன்று ( 22 ) ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது.

பாடசாலை அதிபர் கே.தம்பிராஜா தலைமையில் இடம்பெற்ற மேற்படி நிகழ்வில் பாடசாலை பிரதி அதிபர்,எஸ்.சுவேந்திரராஜா , சாரணியத்திற்கு பொறுப்பான ஆசிரியர்களான ரீ.ருத்ராஹரன் , திருமதி என்.திபாகரன் , திருமதி என்.கருணாநிதி மற்றும் சாரணிய மாணவர்களும் கலந்து கொண்டனர்.