வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோா்களுக்கு ஆதரவு தொிவித்து கடையடைப்பு



மு.கோகிலன்

வலிந்து காணமல் ஆக்கப்பட்டவர்களுக்கு நீதி கோரி மக்கள் எழுச்சி பேரணியும் கதவடைப்பு போராட்டமும் அதன் உறவுகளினால் இன்று செவ்வாய் கிழமை(19) மட்டக்களப்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இதற்கு ஆதரவு தெரிவித்து வாழைச்சேனை,வாகரை,கிரான் மற்றும் செங்கலடி போன்ற கல்குடா தொகுதியிலுள்ள பாடசாலைகளில் மாணவர்களின் வரவு குறைவினால் பாடசாலைகள் இயங்கவில்லை.அரச அலுவலகங்கள் பொதுமக்களின் வரவின்மையால் இயங்கவில்லை,பிரதேசத்தின் கடைகள் அனைத்தும் பூட்டப்பட்டு காணப்படுகிறது.வியாபார நடவடிக்கைகள் இடம்பெறவில்லை.போக்குவரத்து இடம்பெறாத நிலையில் மக்களின் இயல்பு நிலமை பாதிப்படைந்து காணப்படுகிறது.