மட்டக்களப்பு – திருப்பழுகாமம் ஸ்ரீ கௌரி அம்பிகா சமேத கேதீஸ்வரர் சிவன் ஆலய துவஜாரோகண மஹோற்சவத்தின் திருவேட்டை திருவிழா இன்று(செவ்வாய்கிழமை) இடம்பெற்றுள்ளது.
ஆலயத்தின் துவஜாரோகண மஹோற்சவ திருவிழா கடந்த 12ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமானது.
இன்று சுவாமி, உள்வீதி வெள்வீதி வலம் வந்து திருவிழா இடம்பெற்றுள்ளதாக எமது பிராந்திய செய்தியாளர் குறிப்பிட்டார்.
தீர்த்தோற்சவத்துடன் திருவிழா எதிர்வரும் 21ஆம் திகதி நிறைவு பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.