அருள்மிகு ஸ்ரீ மஹா மாரியம்மன் ஆலய வருடாந்த மஹோற்சவத்தின் கொடியேற்ற நிகழ்வு


 

மட்டக்களப்பு கோட்டமுனை புன்னையம்பதி அருள்மிகு ஸ்ரீ மஹா மாரியம்மன் ஆலய வருடாந்த மஹோற்சவத்தின் கொடியேற்ற நிகழ்வு நேற்று  நடைபெற்றது

கிழக்கிலங்கையில் சிறப்புமிக்க ஆலயங்களில் ஒன்றான மட்டக்களப்பு கோட்டமுனை புன்னையம்பதி அருள்மிகு ஸ்ரீ மஹா மாரியம்மன் ஆலயத்தின்  வருடாந்த மஹோற்சவத்தின் கொடியேற்ற நிகழ்வு அடியார்கள் புடை சூழ கோலாகலமாக நடைபெற்றது .

ஆலய பிரதம குரு தர்புருஷ் சிவாச்சாரியார் சிவா ஸ்ரீ பா . சிவலோகேச்வரக் குருக்கள் தலைமையில் விநாயர் வழிபாடுகளுடன் கிரியைகள் ஆரம்பமாகி விசேட யாக, ஹோமம் பூசைகள் நடைபெற்று ,தொடர்ந்து விசேட அபிசேகம் பூஜைகளுடன் பிரதான கும்பங்கள் ஊர்வலமாக கொண்டுசெல்லப்பட்டு அம்மனுக்கு அபிசேகம் செய்யப்பட்டது.

இதனை தொடர்ந்து வசந்த மண்டப பூஜை நடைபெற்று ஆலய மஹோற்சவ கொடியேற்ற நிகழ்வு அடியார்கள் புடை சூழ வேத ,நாத, மேளங்களுடன் அடியார்களின் ஆரோகரா கோசங்களுடன் கோலாகலமாக நடைபெற்றது .

நடைபெற்ற ஆலய மஹோற்சவ கொடியேற்ற நிகழ்வில் பெருமளவான அடியார்கள் கலந்து சிறப்பித்தனர் .