சர்வ மத தலைவர்கள் மற்றும் மட்டக்களப்பு சிவில் சமூக அமைப்புக்களின் பிரதிநிகளுடன் தமிழ் மக்கள் கூட்டணியினர் சந்திப்பு.



(டினேஸ்)

சர்வ மத தலைவர்கள் மற்றும் மட்டக்களப்பு சிவில் சமூக அமைப்புக்களின் பிரதிநிகளுடன் தமிழ் மக்கள் கூட்டணியினர் சந்திப்பு நேற்று மட்டக்களப்பு அமரிக்கன் மிசன் கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.

இதன் போது தமிழ் மக்கள் கூட்டணியின் செயலாளர் நாயகம் சீ.வி விக்னேஸ்வரன் கொள்கைப் பரப்புப் செயலாளர் அருந்தவபாலன் இணைச்செயலாளர் பேராசிரியர் சிவநாதன் மற்றும் மட்டக்களப்பு மாவட்டத்திற்கான செயலாளர் எஸ்.சோமசுந்தரம் இணையம் அரச்சார்பற்ற நிறுவனங்களின் ஒன்றியத்தின் தலைவர் எம்.சீலன் மட்டக்களப்பு மாவட்ட சர்வ மத தலைவர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.


இதில் கலந்து கொண்டு கலந்துரையாடிய பெரும்பாலான சமுக ஆர்வலர்கள் சி.வி விக்னேஷ்வரனிடம் பலகுறைபாடுகளை முன் வைத்தனர் குறிப்பாக இது வரைக்கும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தலைவர்கள் தமது பிரதேச பிரச்சினைகள் குறித்து கரிசனை கொள்வதில்லை என்றும் அவர்கள் அரச சுகபோகங்களை அனுபவித்துக் கொண்டிருக்கின்றனர் என்றும் கவலை வெளியிட்டுள்ளனர்.

இறுதியாக தற்போது இருப்பவர்கள் மத்தியில் தங்களை தான் நம்பி எமது தமிழ் மக்கள் உள்ளனர் என்றும் சி.வி விக்னேஷ்வரனிடம் தெரிவித்தனர்.