மாமரமொன்றியிலிருந்து கூலித்தொழிலாளி ஒருவரின் சடலம் கண்டெடுப்பு !



வவுணதீவு பொலிஸ் பிரிவிற்குற்பட்ட குருந்தையடி முன்மாரி, காஞ்சிரங்குடா கிராமத்திலுள்ள மாமரமொன்றியிலிருந்து கூலித்தொழிலாளி ஒருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

குறித்த நபரின் சடலம் அவரது வீட்டு வளவிலுள்ள மாமரக் கிளையிலிருந்து நேற்று (செவ்வாய்க்கிழமை) கண்டெடுக்கப்பட்டுள்ளது.

3 பிள்ளைகளின் தந்தையான கதிர்காமத்தம்பி தருமலிங்கம் (வயது 40) என்பவரே இவ்வாறு சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளார்.

உயிரிழந்தவரின் சடலம் பிரேத பரிசோதனைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு கொண்டுசெல்லப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பாக பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.