கிறிஸ்தவ தேவாலயங்களில் பெரிய வெள்ளி ஆராதனைகள்


(லியோன்)

கிறிஸ்தவர்களின் பெரிய வெள்ளி தினமான நேற்று  இலங்கையில் உள்ள கிறிஸ்தவ தேவாலயங்களில் பெரிய வெள்ளி ஆராதனைகள் இடம்பெற்று வருகின்றன.

பெரிய வெள்ளி தினத்தை முன்னிட்டு மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள அனைத்து கிறிஸ்தவ தேவாலயங்களில் விசேட ஆராதனைகள் நடைபெற்றுள்ளதுடன் திருச்சிலுவைப்பாதை நிகழ்வுகளும் இடம்பெற்றன .

மட்டக்களப்பு மாவட்டத்தின் பிரச்சித்தி பெற்ற ஆலயங்களான தாண்டவன்வெளி தூய காணிக்கை அன்னை ஆலயம் ,புனித மரியாள் பேராலயம் ,புளியடிக்குடா புனித செபஸ்தியார் ஆலயம் ஆகியவற்றில் பெரியவெள்ளியை சிறப்பு சிலுவைப்பாதை நிகழ்வுகள் நடைபெற்றன.

தாண்டவன்வெளி தூய காணிக்கை அன்னை ஆலயத்தின் பங்குத்தந்தை அருட்தந்தை ரமேஷ் கிறிஸ்டி அடிகளார் தலைமையில் ஆலய முன்றலில் ஆரம்பமான சிலுவைப்பாதையானது மட்டக்களப்பு -வாழைச்சேனை பிரதான வீதியில் காட்சிப்படுத்தப்பட்டது

கிறிஸ்த்துவின் பாடுகள் குறிக்கும் இந்நிகழ்வுகளில் பெருமளவான மக்கள் கலந்துகொண்டனர்.