சூரிய சக்தி ஊடான மின் உற்பத்தி திட்டத்தை அமுல்படுத்த அரசாங்கத்திடம் கோரிக்கை


நாட்டின் அவசர மின் தேவையைக் கருத்திற்கொண்டு, சூரிய சக்தியின் ஊடான மின் உற்பத்தி திட்டத்தை அமுல்படுத்துமாறு அரசாங்கத்திடம் கோரிக்கை விடுப்பதாக, சூரிய சக்தி தொழிற்றுறையினரின் சங்கத்தின் தலைவர் குசன் ஜயசூரிய தெரிவித்தார்.

இன்று (18) கொழும்பு -2 நிப்பொன் ஹோட்டலில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

தொடர்ந்து கருத்துத் தெரிவித்த அவர்,

தற்போது இலங்கையில் நாளாந்தம் முன்னெடுக்கப்படும் 4 மணிநேர மின் துண்டிப்பின் விளைவாக இலங்கை நாளொன்றுக்கு 1 பில்லியன் ரூபாய் பொருளாதார இழப்புக்கு முகங்கொடுத்துள்ளதாகவும் தெரிவித்தார்.

மின் விநியோகத்தின் அளவு இடைவெளி அதிகரிப்பதால், குறைந்த பட்சம் 2022ஆம் ஆண்டு வரை இந்நிலை மிகவும் மோசமடையும் என்றும் எதிர்வு கூறப்புடுவதாகவும் வருடாந்த மின்சாரத்துக்கான கேள்வியானது 5 சதவீதத்தால் அதிகரிப்பதுடன், 2025ஆம் ஆண்டு தேசிய மின்சார கட்டமைப்புக்கு மேலதிகமாக 5,500 GWh மின்சார உற்பத்தி இலங்கைக்கு தேவைப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.