மட்டக்களப்பு தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்புச் சபை பொதுமக்களுக்காக விடுத்துள்ள அறிவித்தல்!


 

(சறூக்) 

நாட்டில் தொடர்ந்தும் அமுல்படுத்தப்பட்டு வரும் மின்சார தடைக்கு மத்தியிலும் தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபையின் மட்டக்களப்பு பிராந்திய முகாமையாளர் அலுவலகம் தனது பாவனையாளர்களுக்கான நீர் விநியோகத்தினை தொடர்ச்சியாக வழங்கிவருகின்றது. எனினும் நீரினை சேமித்துவைத்து விரையமின்றி பாவிக்குமாறு பொதுமக்களை கேட்டுக்கொள்வதாக தேசிய நீர் வழங்கல்  வடிகாலமைப்புச் சபையின் மட்டக்களப்பு பிராந்திய முகாமையாளர் தெரிவித்துள்ளார்.