தூக்குத் தண்டனை மே மாதம்


நீதிமன்றத்தால் மரண தண்டனை விதித்து தீர்ப்பளிக்கப்பட்டவர்களுக்கான தூக்குத்தண்டனையை எதிர்வரும் மே மாதத்துக்குள் நிறைவேற்ற ஜனாதிபதி நடவடிக்கை எடுத்து வருவதாக தெரிவிக்கப்படுகின்றது. 

அதன்பிரகாரம் போதைப்பொருள் கடத்தல் வியாபாரத்துடன் தொடர்புபட்டு மரண தண்டனை விதித்து தீர்ப்பளிக்கப்பட்ட 4 பேருக்கே ஆரம்பமாக தூக்குத்தண்டனை நிறைவேற்றப்போவதாகவும் தெரியவருகின்றது