இன்று முதல் புதிய சுற்றிவளைப்பு ஆரம்பம்



பயங்கரவாதத் தாக்குதல்களில் ஈடுபட்ட சந்தேகநபர்களைக் கைது செய்வதற்காக இன்று (24ஆம் திகதி) முதல் புதிய சுற்றிவளைப்பு ஆரம்பிக்கப்படவுள்ளதாக, இராணுவத்தளபதி லெப்டினன் ஜெனரல் மகேஷ் சேனாநாயக்க தெரிவித்துள்ளார்.

இதேவேளை, பயங்கரவாத நடவடிக்கைகளில் ஈடுபட்ட சந்தேகநபர்கள், வாகனங்கள் மற்றும் பயங்கரவாத நடவடிக்கைகள் தொடர்பில் தெரியப்படுத்துவதற்காக இராணுவ தலைமையகத்தினால் விசேட தொலைபேசி இலக்கங்கள் அறவிக்கப்பட்டுள்ளன.

இதற்கிணங்க, பயங்கரவாத நடவடிக்கைகள் தொடர்பிலான தகவல்களை
0112 – 43 42 51
0114 – 05 51 05
0114 – 05 51 06
0766 – 91 16 04
0112 – 43 33 35 ஆகிய இலக்கங்களுக்கு தொடர்புகொண்டு அறிவிக்க முடியும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.