உதவி கல்விப் பணிப்பாளர் குறித்து விரிவான விசாரணை


ஐஎஸ் இயக்கத்துடனான தொடர்புகளைகொண்டிருந்ததான சந்தேகத்தின் பேரில் கைதான உதவி கல்விப் பணிப்பாளர் குறித்து விரிவான விசாரணை மேற்கொள்ளப்பட்டுவருவதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளரும் பொலிஸ் அத்தியட்சகருமான றுவான் குணசேகர தெரிவித்தார்.

தற்கொலை குண்டுதாரி சஹ்ரான் ஹசிமீன் நெருங்கிய நெருங்கிய தொடாபுகளை வைத்திருந்தவரும் அவருடன் நிதியை கையாண்டவரும் என சந்தேகிக்கப்படும், மொஹமட் அலியர் கைது செய்யப்பட்டுள்ளார். 60 வயதான இவர் காத்தான்குடியைச்சேர்ந்தவர். காத்தான்குடி பொலிசாரினால் இவர் நேற்று மாலை காத்தான்குடி பொலிசாரினால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
பாதுகாப்புப் படையினர் நாடு முழுவதிலும் முன்னெடுக்கும் தேடுதல் நடவடிக்கை தொடர்ந்தும் முன்னெடுக்கப்படும் சோதனைகளில் பெருமளவு சட்டவிரோத பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.


ஐஎஸ் இயக்கத்துடனான தொடர்புகளின் அடிப்படையில் சமீபத்தில் கைதான உதவி கல்விப் பணிப்பாளர் தொடர்பில் பரந்த விசாரணை மேற்கொள்ளப்படுகிறது. அவர் விளக்கமறியலில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார் பாடசாலைகளில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது என்றும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் றுவன் குணசேகர தெரிவித்துள்ளார்.