மொஹமட் சஹ்ரானின் ஆதரவாளர்கள் ஐவர் கைது


மொஹமட் சஹ்ரானின் ஆதரவாளர்கள் 5 பேர் இன்று அதிகாலை ஹொரவபொத்தான – கிவுலேகட மற்றும் எல்லேவெவ ஆகிய பகுதிகளில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சஹ்ரானின் பிரசார நடவடிக்கைகளுக்கு சந்தேகநபர்கள் உதவி புரிந்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.

கெப்பத்திகொல்லாவ பகுதியில் கைது செய்யப்பட்ட தேசிய தௌஹீத் ஜமாத் அமைப்பின் இரண்டு சந்தேகநபர்களிடம் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளிலிருந்து வௌியாகிய தகவலின் பிரகாரம் குறித்த சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அதிபர் ஒருவரும் இரண்டு ஆசிரியர்களும் அபிவிருத்தி உத்தியோகஸ்தர்களுமே இன்று கைது செய்யப்பட்டுள்ளனர்.