ஜனாதிபதி தேர்தலை நடத்தாவிட்டால் நீதிமன்றத்தை நாடுவேன் ;மஹிந்த

நடப்பு அரசாங்கம் ஜனாதிபதி தேர்தலை நடத்தாதிருக்க தயாராகி வருவதாகவும், அவ்வாறு செயற்பட்டால் தாம் நீதிமன்றத்தை நாடத் தயாரெனவும், எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.

பத்தரமுல்லை-நெலும் மாவத்தையில் அமைந்துள்ள தொகுதி அமைப்பாளர்களுடனான சந்திப்பிலேயே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.