O/L பரீட்சைக்கு விண்ணப்பிப்பதற்கான காலம் நீடிப்பு


2019 கல்விப் பொதுத்தராதர சாதாரண தரப் பரீட்சைக்கு விண்ணப்பம் செய்வதற்கான கால எல்லை நீடிக்கப்பட்டுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அறிவித்துள்ளார். 

அதன்படி விண்ணப்பிக்க முடியுமான இறுதித் திகதி இம்மாதம் 31ம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது. 

பாடசாலை மற்றும் தனிப்பட்ட விண்ணப்பதாரிகளும் குறித்த காலத்தில் பரீட்சைக்கு விண்ணப்பிக்க முடியும் என்று அவர் கூறியுள்ளார்.#

இந்த விடயம் தொடர்பான மேலதிகத் தகவல்களை 1911 என்ற துரித தொலைபேசி இலக்கம் அல்லது 011 2 784 208 அல்லது 011 2 784 537 ஆகிய தொலைபேசி இலக்கங்களூடாக அறிந்துகொள்ள முடியும்.