ரிஷாட் பதியுதீனுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை இன்று சபாநாயகரிடம் கையளிப்பு


அமைச்சர் ரிஷாட் பதியுதீனுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை சபாநாயகரிடம் கையளிக்கப்பட்டுள்ளது.

ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் ஷெஹான் சேமசிங்க உள்ளிட்ட 64 பாராளுமன்ற உறுப்பினர்களின் கையழுத்துடன் குறித்த நம்பிக்கையில்லாப் பிரேரணை இன்று (16ஆம் திகதி) முற்பகல் சபாநாயகரிடம் கையளிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, அமைச்சர் ரிஷாட் பதியுதீனுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை தொடர்பில் இன்றைய கூட்டத்தில் தீர்மானிக்கப்படும் என, ஶ்ரீலங்கா சுதந்திர கட்சியினர் குறிப்பிட்டுள்ளனர்.

கட்சியின் தலைவர், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் தலைமையில் இந்தக் கூட்டம் நடைபெறவுள்ளதாக, ஶ்ரீலங்கா சுதந்திர கட்சியின் பொதுச்செயலாளர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார்.