மட்டக்களப்பு நகரில் முஸ்லிம்களின் பங்களிப்பில் பொலிஸ் ஏற்பாட்டில் வெசாக்





{சிஹாராலத்தீப்)

மட்டக்களப்பு நகரில் வெசாக் பண்டிகையை முன்னிட்டு முஸ்லிம் அமைப்புக்களின் பங்களிப்பில் மட்டக்களப்பு தலைமையக பொலிஸ் நிலையத்தின் ஏற்பாட்டில் பெரிய அளவிலான இனிப்பு கஞ்சி தான சாலை   நேற்றிரவு நடாத்தப்பட்டது.

மட்டக்களப்பு நகர முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளனத் தின் பங்களிப்பில் பொலிசாரால் நடாத்தப்பட்ட இந்த இனிப்புக் கஞ்சி தான சாலையில் மாவட்டத்தின் பலபிரதேசங்க ளைச் சேர்ந்த பெருமளவு பல இனங்கள் சார்ந்த மக்கள் சகோதர வாஞ்சையுடன் கலந்துகொண்டு இனிப்புக்கஞ்சி அருந்தினர்.

மட்டக்களப்பு நகரமுஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளனத் தின் தலைவரும் வர்த்தகருமான கே.எம்.எம்.கலீல் ,உப தலைவர் மௌலவி ஏ.எம்.இல்யாஸ் பலாஹி ,உதவிப் பொ லிஸ் அத்தியட்சர் எல்.ஆர். குமாரஸ்ரீ,தலைமை பொலிஸ் பொறுப்பதிகாரி தீபால் தீக ஹவதுர ,மட்டக்களப்பு மாநகர உறுப்பினர்,ஏ.எம்.ராஜன் உட்பட பல பிரமுகர்கள் பிரசன்னமாகியிருந்தனர்