கணினி வள நிலைய முகாமையாளர் குருசாமி கந்ததாஸ், அரச சேவையில் இருந்து ஓய்வு

(சித்தா)
மட்டக்களப்பு கல்வி வலய கணினி வள நிலைய முகாமையாளர் குருசாமி கந்ததாஸ் அவர்கள் 23.06.2019அன்று தனது பணியில் இருந்து ஒய்வு பெற்றார். இவரின் பணியினைக் கௌரவிக்குமகமாக 1985 ஆம் ஆண்டு பதுளை மாவட்டத்தில் தனது ஆசிரியப் பணியை ஆரம்பித்த இவர் மட்/கருவேப்பங்கேணி விபுலாநந்தா கல்லூரி, மண்முனை வடக்கு கோட்டக் கல்வி அலுவலகம், மட்டக்களப்பு வலயக் கல்வி அலுவலகம் போன்ற இடங்களில் பணியாற்றிய இவர் ஓய்வு பெறும் வரை மட்டக்களப்பு கணனி வள நிலையத்தில் தனது பணியனை சிறப்பாக ஆற்றியிருந்தார்.
இவரின் பணியின் சிறப்பினைப் பாராட்டிக் கௌரவிக்குமுகமாக மட்டக்களப்பு மாவட்ட கணினி வள நிலையங்களைச் சேர்ந்த உத்தியோகஸ்த்தர்கள் சேவைநலன் பாராட்டு நிகழ்வினை நடாத்தியிருந்தனர்.
இந் நிகழ்வில் செ.திவ்வியராஜ் - பட்டிருப்பு கணினி வள நிலைய முகாமையாளர், .க.ஜெகதீஸவரன்- கல்குடா கணினி வள நிலைய முகாமையாளர், தி.ரமேஸ்வரன் - மட்டக்களப்பு கணினி வள நிலைய விரிவுரையாளர், சோ.ஹேமானந் - மட்டக்களப்பு கணினி வள நிலைய விரிவுரையாளர், திருமதி.றூபினி.மை.தே.டேவிட்- பட்டிருப்பு கணினி வள நிலைய விரிவுரையாளர், போன்றோர் கலந்து கொண்டு குருசாமி கந்ததாஸ், அவர்களின் சேவையினைப் பாராட்டிக் கௌரவித்தனர்.