கல்முனையில் அத்துரலிய ரத்ன தேரர் !

பாறுக் ஷிஹான்

கல்முனை தமிழ் பிரதேச செயலகத்தை தரமுயர்த்துமாறு கோரி மேற்கொள்ளப்படும் உண்ணாவிரதப்போராட்டத்திற்கு பாராளுமன்ற உறுப்பினர் அத்துரலிய ரத்ன தேரர் வருகை தந்துள்ளார்.

இன்று(20) குறித்த இடத்திற்கு வருகை தந்த அவர் உண்ணாவிரதம் மேற்கொள்பவர்களது சுகநலன்களை விசாரித்து அறிந்து கொண்டார்.

மஞசள் சீலையால் குடைபோல பிடிக்கப்பட்டு, பெரு வரவேற்புடன் அவர் போராட்ட இடத்திற்கு அழைத்து வரப்பட்டார். மட்டக்களப்பு எம்.பி வியாழேந்திரனும் உடன் வந்தார்.

இதேவேளை, தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் செயலாளர் செ.கஜேந்திரனும் போராட்டத்தில் கலந்து கொண்டுள்ளார்.

மேலும் இவரது வருகையின் பின்னர் மட்டக்களப்பு விகாராதிபதியும் அவ்விடத்திற்கு சென்று உண்ணாவிரதத்தில் உள்ள கல்முனை சுபத்திராம விகாரையின் விகாராதிபதி சங்கைக்குரிய ரண்முத்துக்கல சங்கரத்ன தேரர் இகிழக்கிலங்கை இந்துகுருமார் ஒன்றிய தலைவர் ஸ்ரீ ஸ்ரீ க.கு.சச்சிதானந்தம் சிவம் குரு கல்முனை மாநகரசபை உறுப்பினர்களான சா.சந்திரசேகரம் ராஜன் மற்றும் அழகக்கோன் விஜயரத்னம் ஆகியோரையும் பார்வையிட்டு ஆறுதல் கூறினார்.

பெருந்திரளான மக்கள் இப்போராட்டத்தில் ஈடுபட்டவர்களை சென்று பார்வையிட்டு வருகின்றனர்.

இங்கு தேரர் உரையாற்றுகையில் :

பெரும்பான்மையாக தமிழர்கள் வாழும் பிரதேசத்திலே அவர்களுக்கு அதிகாரத்தை வழங்காமல் தடுத்து செயற்பட்டுக்கொண்டிருக்கின்றார்கள் .

பெரும் அநீதி இழைக்கப்பட்டுள்ளது .

2014 ஆம் ஆண்டு இதனை கொடுக்க வேண்டும் என அரசாங்கத்தால் அனுமதி வழங்கப்பட்டும் இங்குள்ள முஸ்லீம் அரசியல்வாதிகளே இதற்கு தடையாக உள்ளனர் .