மதுபோதையில் வாகனம் செலுத்திய 3300 சாரதிகள் கைது



மதுபோதையில் வாகனம் செலுத்திய சுமார் 3300 சாரதிகள் கடந்த 05 ஆம் திகதி முதல் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். 

மதுபோதையில் வாகனம் செலுத்திய 3354 சாரதிகள் புதன் கிழமை வரை கைது செய்யப்பட்டுள்ளதாகவும் குறித்த விஷேட தேடுதல் நடவடிக்கை ஆகஸ்ட 05 ஆம் திகதியுடன் நிறைவடையும் எனவும் தெரிவிக்கப்படுகின்றது. 

இவ்வாறு கைது செய்யப்படும் சாரதிகளுக்கு 25 ஆயிரம் ரூபா அபராதம் அறவிடப்படும் என பொலிஸ் ஊடக பேச்சாளர் ருவன் குணசேகர தெரிவித்துள்ளார். 

இந்நிலையில் மதுபோதையில் வாகனம் செலுத்திய சாரதிகளால் கடந்த ஆண்டு 3000 இற்கும் அதிகமான உயிர்கள் காவு கொள்ளப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.