கிரிக்கெட் பயிற்றுவிப்பாளர்களை பதவி விலகுமாறு விளையாட்டுத்துறை அமைச்சர் அறிவுறுத்தல்



பங்களாதேஷ் அணியுடன் இடம்பெற உள்ள ஒருநாள் போட்டி தொடரில் பின்னர் இலங்கை தேசிய கிரிக்கெட் அணியின் பயிற்றுவிப்பாளர் களை அவர்களது பதவியிலிருந்து விலகிக் கொள்ளுமாறு அறிவிக்குமாறு விளையாட்டுத்துறை அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ இலங்கை கிரிக்கட் நிறுவனத்திற்கு கடிதம் ஒன்றின் மூலம் அறிவித்துள்ளார். 

அதன் பின்னர் அவர்களின் ஒப்பந்தம் தொடர்பில் கவனத்தில் கொள்ளுமாறும் அவர் குறித்த கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார். 

கிரிக்கெட் விளையாட்டின் முன்னேற்றத்திற்காக மேலும் பல தீர்மானங்களை எடுக்க இருப்பதாக அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ எமது செய்தி பிரிவிடம் தெரிவித்துள்ளார்.