15 வயது சிறுமியை கர்ப்பமாக்கிய குடும்பஸ்தர் கைது



(பொகவந்தலாவ நிருபர் எஸ் சதீஸ்) 


நோர்வூட் பொலிஸ் பிரிவு பொககெர்க்கஸ் வோல்ட் கீழ் பிரிவு தோட்ட பகுதியில் வசித்த 15 வயது சிறுமி, குழந்தை ஒன்றை பிரசவித்த சம்பவம் தொடர்பில் சந்தேக நபர் ஒருவர் கினிகத்தேன பொலிஸாரினால் கைது செய்யபட்டுள்ளார். 


இந்த சம்பவம் நேற்று (23) வெள்ளிக்கிழமை இடம்பெற்றதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர். 

குறித்த 15 வயது சிறுமி கர்ப்பம் தரித்த விடயம் வெளியானதை தொடர்ந்து, சிறுமி கடந்த 3 தினங்களுக்கு முன்பு டிக்கோயா கிழங்கன் வைத்தியசாலையில் அனுமதிக்கபட்டார். 

தொடர்ந்து சிறுமியால் பிரசவிக்கபட்ட குழந்தை 5 மாத குழந்தை என்பதால் குழந்தை இறந்துள்ளதாக பொலிஸாரின் ஆரம்ப கட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது. 

குழந்தை இறந்த விடயம் தொடர்பில் நோர்வூட் பொலிஸாருக்கு தகவல் வழங்கபட்டதை தொடர்ந்து விசாரணைகளை ஆரம்பித்த பொலிஸாருக்கு, தாம் கர்ப்பம் தரித்தமைக்கான காரணம் கினிகத்தேன பகுதியை சேர்ந்தவர் என சிறுமி வழங்கபட்ட வாக்குமுலத்தில் குறிப்பிட்டுள்ளார். 

சிறுமி வழங்கிய வாக்குமூலத்தின் அடிப்படையில் நோர்வூட் பொலிஸாரால் கினிகத்தேன பொலிஸாருக்கு தகவல் வழங்கபட்டது. 

தொடர்பில் குறித்த சந்தேக நபர் கைது செய்யபட்டுள்ளதாகவும் சந்தேக நபர் திருமணமானவர் என கினிகத்தேன பொலிஸாரினால் மேற்கொள்ளபட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது. 

இதேவேளை, குறித்த சிறுமி தொடர்ந்தும் டிக்கோயா கிழங்கன் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக வைத்தியசாலையின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார். 

கைது செய்யபட்ட சந்தேகநபரை ஹட்டன் நீதிமன்ற நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்த நடவடிக்கையினை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். 

சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை கினிகத்தேன பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடதக்கது.