வழக்குத் தவணைகளுக்கு சமூகமளிக்காது தலைமறைவாக இருந்த நபர் விளக்கமறியலில்



(எப்.முபாரக்)


கடந்த 2012 ஆம் ஆண்டு காலப்பகுதியில் சட்டவிரோதமாக கடல் வழியாக அவுஸ்திரேலியாவுக்கு செல்ல முற்பட்டவர் வழக்குத் தவணைகளுக்கு சமூகமளிக்காது தலைமரைவாக இருந்த நபரை இம்மாதம் 22ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு மூதூர் நீதிமன்ற நீதிவான் எம்.எஸ்.எம்.சம்சுதீன் நேற்று (18) உத்தரவிட்டார்.

பட்டித்திடல்,தோப்பூர் பகுதியைச் சேர்ந்த 36 வயதுடைய ஒருவரே விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.  சந்தேக நபர் கடந்த 2012 ஆம் ஆண்டு காலப்பகுதியில் கடல் மார்க்கமாக சட்டவிரோதமான முறையில் அவுஸ்திரேலியாவுக்கு செல்ல முற்பட்ட போது கடற்படையினரால் கைது செய்யப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்ட நிலையில் மூன்று வழக்குத் தவணைகளுக்கு சமூகமளிக்காது தலைமறைவாக இருந்த நிலையிலே கைது செய்ததாக மூதூர் பொலிஸார் தெரிவிக்கின்றனர். 

சந்தேக நபரை பொலிஸார் மூதூர் நீதிமன்ற நீதிவான் முன்னிலையில் (வாசஸ்தலம்) ஆஜர்படுத்திய போதே விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டார்.