மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை கட்டிட பல இலச்சம் ரூபா பெறுமதியான இடி தாங்கி செம்பிலான பட்டம் திருட்டு

(சரவணன்)

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை கட்டிடத்தில் அமைக்கப்பட்டிருந்த இடிதாங்கியின் செப்பு பட்டத்தை அறுத்து திருடப்பட்டுள்ளதாக வைத்தியசாலை நிர்வாகம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளதா மட்டு தலைமையக பொலிஸ் நிலைய பொலிசார் தெரிவித்தனர்

குறித்த வைத்திய சாலையில் புதிதாக அமைக்கப்பட்டு பாவிக்கப்பட்டுவரும் கட்டிடத்தில் இடி மின்னல் களில் இருந்து கட்டிடத்தை பாதுகாப்பதற்காக பல இலச்சம் ரூபா பெறுமதியான இடி தாங்கி கம்பி கட்டிடத்தின் மாடியில் இருந்து நிலம் வரைக்கும் செம்பு ரக பட்டம் அமைக்கப்பட்டிருந்தது

இந்த செம்பிலான பட்டத்தை கடந்த 10, 15 நாட்களுக்கு முன்னர் யாரோ அறுத்து திருடியுள்ளதாக கடந்த 05 ம் திகதி வைத்தியசாலை நிர்வாகம் முறைப்பாடு செய்துள்ளதா பொலிசார் தெரிவித்தனர்.


இந்த திருட்டு சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மட்டு தலைமைய பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்