கிரான் மற்றும் களுவாஞ்சிகுடியில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் விசேட விழிப்புணர்வு கருத்தரங்கு


(ந.குகதர்சன்)


தமிழ் தேசிய கூட்டமைப்பின் மாபெரும் விழிப்புணர்வு கருத்தரங்கு நாளை திங்கட்கிழமை காலை 9.00 களுவாஞ்சிக்குடி இராசமானிக்கம் மண்டபத்திலும் மற்றும்  கிரான் றெஜி கலாசார மண்டபத்தில் பிற்பகல் 3 மணிக்கும் இடம்பெறவுள்ளதாக எற்பாட்டாளர்கள் தெரிவித்தனர் 

இதன்போது தமிழ் மக்களின் கேள்விகளுக்கு பதிலளிக்கவும், சமகால அரசியல் நிலவரம் தொடர்பாக தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஊடக பேச்சாளரும், ஜனாதிபதி சட்டத்தரணியும், பாராளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் தெளிவுபடுத்த உள்ளார்.

அத்தோடு தமிழ் தேசிய கூட்டமைப்பு ஏதும் செய்யவில்லை? தமிழ் தேசிய கூட்டமைப்பு அரசுக்கு முட்டுக் கொடுக்கின்றதா? போன்ற பொய் உரைகளை பொடி பொடியாக்கும் உண்மை தரவுகளைய கேட்க கட்சியினர் அழைப்பு விடுக்கின்றனர்.