க.பொ.த சாதாரண தர மாணவர்களுக்கான இலவசக் கருத்தரங்கு



கல்வி கலை பண்பாடுகள் மற்றும் சமூக பொருளாதார அபிவிருத்தி ஒன்றியத்தின் நிதி அனுசரணையில் மட்டக்களப்பு கல்வி அபிவிருத்திச் சங்கம்(EDS) நடாத்தும் க.பொ.த சாதாரண தர மாணவர்களுக்கான மாதாந்த இலவசக் கருத்தரங்கு இம்மாதம் 13,14,15 ஆம் திகதிகளில் நடைபெற இருக்கின்றது.

கல்லடி நெச்சிமுனை கல்வி அபிவிருத்திச் சங்க சிவநேசராஜா மண்டபத்தில் நடைபெறும் இவ் இலவசக் கருத்தரங்கிற்கு க.பொ.த சாதாரண தரத்தில் கல்வி பயிலும் மாணவர்கள் அனைவரும் கலந்து கொள்ள முடியும்.