தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சையில் களுவாஞ்சிகுடி பட்டிருப்பு மகா வித்தியாலய மாணவி பழனித்தம்பி பவுஸ்தினி 193 புள்ளிகள் பெற்று சாதனை படைத்து ஊரிற்கும் பாடசாலைக்கும் பெருமை சேர்த்துள்ளார்.
களுதாவளையை சேர்ந்த பழனித்தம்பி கலைவாணி தம்பதியினரின் மகள் ஆவார் .
தந்தை கூறுகையில் " நான் கட்டாரில் 4 வருடங்களாக குடும்பத்திற்காக வேலை செய்து வருகிறேன். மனைவி வீட்டில் மகளுக்கு ஊக்கமளித்துள்ளார். நான் வெளிநாட்டில் இருக்கும் போதும் இணையதளங்களில் தேடி மகளுக்கு புலமைப்பரிசில் பரீட்சை தொடர்பான வினாத்தாள்கள் மற்றும் ஏனைய விடயங்களை அனுப்பி வைப்பேன் . பரீட்சைக்காக வெளிநாட்டிலிருந்து வந்திருந்தேன் மீண்டும் போக போகிறேன் .எப்படியாவது மகளை இதே போல் வருங்காலங்களிலும் அக்கறையாக படிப்பிக்க வேண்டும் .
பாடசாலைக்கும் மற்றும் தனியார் வகுப்பு ஆசிரியருக்கும் எங்களது நன்றியைத்தெரிவிக்கிறோம் என தந்தை கூறினார் .