பாரிய இடியுடன் மழைக்கான எச்சரிக்கை

பாரிய இடி, மின்னல் தாக்கம் தொடர்பாக வளிமண்டலவியல் திணைக்களம் சிவப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.

மேல், மத்திய, சப்ரகமுவ, வடமேல், வடமத்தில் மற்றும் வடக்கு மாகாணங்களிலும் மாத்தறை, பதுளை, திருகோணமலை மற்றும் மட்டக்களப்பு ஆகிய மாவட்டங்களில் ஆங்காங்கே பிற்பகல் மற்றும் இரவு வேளைகளில் பலத்த இடி, மின்னலுடன் மழை பெய்யக்கூடிய சாத்தியக்கூறு காணப்படுவதாக, வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்தது.

அத்தோடு மணிக்கு 70 முதல் 80 கிலோமீற்றர் வேகத்தில் பலத்த காற்று வீசும் சாத்தியம் காணப்படுவதாகவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 

மின்னல் தாக்கங்களினாலும் பலத்த காற்றினாலும் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகின்றார்கள்.