மட்டக்களப்பில் ஐந்து முறைப்பாடுகள்




மட்டக்களப்பில் இதுவரை ஐந்து முறைப்பாடுகள் பதிவாகியுள்ளதாக, மட்டக்களப்பு மாவட்டச் செயலகத்தில் இயங்கி வரும் தேர்தல் மாவட்ட முறைப்பாட்டுப் பிரிவு தெரிவித்துள்ளது.
மட்டக்களப்பு மாவட்டத்தில் உதவி தேர்தல் ஆணையாளரால் ஆரம்பிக்கப்பட்டுள்ள இந்த முறைப்பாட்டுப் பிரிவு, மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் தற்போது இயங்கி வருகின்றது.
இதில் அரசாங்க அலுவலர்கள் பிரசாரங்களில் ஈடுபடுகின்றமை தொடர்பான முறைப்பாடுகளுடன், பொருள்கள் விநியோகம், சட்டவிரோத காட்சிப்படுத்தல், ஊடகங்களில் ஒரு கட்சிசார் தொடர்பான பிரசாரங்களில் ஈடுபட்டு வருவதும், வைத்தியசாலை ஊழியர்கள் கடமை நேரங்களில் வருகின்ற நோயாளிகளுக்களுக்கு தேர்தல் பிரசாரங்கள் செய்து வருவதாகவும் முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக, மாவட்டத் தேர்தல் முறைப்பாட்டு பிரிவுக்கு கிடைத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.