இலங்கை புகையிரத சம்பளப் பிரச்சினைக்கு தீர்வுகாண அமைச்சரவை நடவடிக்கை




இலங்கை ரயில் சேவை, மூடிய சேவைத் திணைக்களமாக தரமுயர்த்தல் மற்றும் அதற்காக விஷேட மற்றும் தனித்தன்மை வாய்ந்த சம்பள கட்டமைப்பை அறிமுகப்படுத்துவதற்கு நடவடிக்கை மேற்கொள்ள அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

நேற்று (15) நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்திலே இதற்கான தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

ரயில் சேவையை மூடிய சேவை (Close) ஒன்றாக தரமுயர்த்தல் மற்றும் பொருத்தமான சம்பள கட்டமைப்பொன்றை தயாரிப்பது தொடர்பில் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக அமைச்சரவையினால் இதற்கு முன்னர் அங்கீகாரம் வழங்கப்பட்டிருந்தது. 

இதற்கு அமைவாக பதில் போக்குவரத்து மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சரினால் இது தொடர்பில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள பரிந்துரையை நடைமுறைப்படுத்தும் பொழுது ஏற்படக்கூடிய நடைமுறைப்பிரச்சினைகள் மற்றும் அவற்றை குறைக்கும் வகையில் அதன் பரிந்துரையை நடைமுறைப்படுத்துதற்காக மேற்கொள்ளவேண்டிய நடவடிக்கைகள் தொடர்பில் மதிப்பீடு செய்து சிபாரிசுகளை சமர்ப்பிப்பதற்கென அரச நிர்வாகம், இடர் முகாமைத்துவம் மற்றும் கால்நடை அபிவிருத்தி அமைச்சின் சிரேஷ்ட அதிகாரி ஒருவரின் தலைமையிலான அதிகாரிகள் குழு ஒன்றை நியமிப்பதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.