தடைசெய்யப்பட்ட வலைகளை பயன்படுத்தி மீன்பிடியில் ஈடுபட்ட 06 பேர் கைது



கடற்படையால் 2019 நவம்பர் 03 ஆம் திகதி திருகோணமலை பெக் பே கடல் பகுதியில் மேற்கொள்ளப்பட்ட ரோந்து நடவடிக்கையின் போது தடைசெய்யப்பட்ட வலைகளைப் பயன்படுத்தி சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட 06 பேர் கைது செய்யப்பட்டனர்.

அதன்படி தடைசெய்யப்பட்ட வலைகளைப் பயன்படுத்தி சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட இந்த சந்தேக நபர்கள், திருகோணமலை பெக் பே கடல் பகுதியில் நடத்தப்பட்ட ரோந்து நடவடிக்கையின் போது கிழக்கு கடற்படைத் கட்டளை மூலம் கைது செய்யப்பட்டனர்.

கைது செய்யப்பட்ட நபர்கள் 22 முதல் 56 வயது வரையிலான திருகோணமலை மற்றும் நிலாவெளி பகுதிகளில் வசிப்பவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர். அவர்களிடமிருந்து 225 நீளமான தடைசெய்யப்பட்ட வலை, ஒரு டிங்கி படகு, ஒரு வெளிப்புற இயந்திரம் மற்றும் சில மீன்பிடிபொருட்கள் கடற்படையினரினால் கைப்பற்றப்பட்டது.

டிங்கி படகு, வலை மற்றும் பிற மீன்பிடி பொருட்களுடன் குறித்த நபர்கள் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக இலங்கை கடலோர காவல்படை மூலம் திருகோணமலை உதவி மீன்வளத்துறை இயக்குநரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

இதுபோன்ற தடைசெய்யப்பட்ட வலைகளைப் பயன்படுத்துவதால் கடல் சுற்றுச்சூழல் பாதிப்புக்குள்ளாகியுள்ள நிலையில், இலங்கையைச் சுற்றியுள்ள கடல் மண்டலத்தின் மீன் மற்றும் கடல் வளங்களை பாதுகாக்க கடற்படை வழக்கமான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.