கிண்ணியாவில் சட்டவிரோத சிற்பி அகழ்வு




திருகோணமலை கிண்ணியாவில் சட்டவிரோதமான அகழப்பட்டிருந்த சிற்பிகள் கைப்பற்றப்பட்டுள்ளன.

கரையோரம் பேணல் மற்றும் கரையோர மூலவளங்கள் முகாமைத்துவ திணைக்கள உத்தியோகத்தர்கள், பொலிஸார் உதவியுடன் பொதி செய்யப்பட்டிருந்த சிற்பிகள் கைப்பற்றப்பட்டன.

கிண்ணியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நடுத்தீவு பிரதேசத்தில் சிற்பி அகழ்வதற்கான அனுமதிப்பத்திரம், சிப்பிகளை களஞ்சியப்படுத்துவதற்கான அனுமதிப்பத்திரம் மற்றும் அதனை கொண்டு செல்வதற்கான அனுமதிப்பத்திரம் என்ற மூன்று சட்ட மீறல் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதன்போது 320 சிற்பிப் பொதிகள் கைப்பற்றப்பட்டு கிண்ணியா பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளன.

இது தொடர்பாக எவரும் கைதுசெய்யப்படாத நிலையில் மேலதிக விசாரணைகளை கிண்ணியா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.