வணிகமும், கணக்கீட்டு கல்வியும் பாடநூல் வெளியிட்டு விழா


ந.குகதர்சன்
காத்தான்குடி மத்திய கல்லூரியில் கடமையாற்றும் ஆசிரியர் சிவராசா சிவறமணன் எழுதிய பத்தாம் தரத்திற்கான வணிகமும், கணக்கீட்டு கல்வியும் பாடநூல் வெளியிட்டு விழா வெள்ளிக்கிழமை பாடசாலை பிரதான மண்டபத்தில் இடம்பெற்றது.
மட்டக்களப்பு  கல்வி வலயத்திற்குட்பட்ட காத்தான்குடி மத்திய கல்லூரியில் தரம் 10 மாணவர்களின் வணிகமும், கணக்கீட்டு கல்வி பாட அடைவு மட்டத்தினை அதிகரிக்கும் நோக்கில் ஆசிரியர் சிவராசா சிவறமணன் எழுதிய பாடநூல் மாணவர்களுக்கு வெளியிடப்பட்டது.

காத்தான்குடி மத்திய கல்லூரியின் அதிபர் எஸ்.எச்.பிர்தௌஸ் தலைமையில் பாடசாலை மண்டபத்தில் நடைபெற்ற இந்நிகழ்வில் பாடசாலை பிரதி அதிபர்கள், பகுதித் தலைவர்கள், ஆசிரியர்கள், கல்வி சாரா ஊழியர்கள், மாணவர்கள் எனப் பலர் கலந்து கொண்டனர்.

இதன்போது தரம் 10 புதிய பாடத்திட்டம் வணிகமும், கணக்கீட்டு கல்வியும்  எனும் துணைப் பாட நுலினை மாணவர்கள் இலகுவில் கற்றுக் கொள்வதற்காகவும், இந்நூல் மாணவர்களுக்கு ஓர் இலகு வழிகாட்டியாகவும், மாணவர்களின் அடைவு மட்டத்தினை அதிகரிக்கும் வகையில் உறுதுணையாக திகழும் என இந்நூலின் ஆசிரியர் சிவராசா சிவறமணன் தெரிவித்தார்.