மட்டக்களப்பு தட்டுமுனை மாணிக்க விநாயகர் வித்தியாலயத்தின் வருடாந்த பரிசளிப்பு விழா



மட்ஃககுஃ தட்டுமுனை மாணிக்க விநாயகர் வித்தியாலயத்தின் வருடாந்த பரிசளிப்பு விழா
கல்குடா கல்வி வலயத்தின் அதிகஷ்டப் பாடசாலையான மட்ஃககுஃ தட்டுமுனை மாணிக்க விநாயகர் வித்தியாலயத்தின் வருடாந்த பரிசளிப்பு விழாவானது 27. 11. 2019 புதன் அன்று பாடசாலையின் தற்காலிக கொட்டிலில் நடைபெற்றது.

இப் பரிசளிப்பு விழாவிற்கு பிரதம விருந்தினர்களாக கோறளைப் பற்று வடக்கு வாகரைப் பிரதேச தவிசாளர் திரு. எஸ். கோணலிங்கம், பாடசாலையின் மேம்பாட்டுத் திட்ட உத்தியோகஸ்தரும் கணித பாட ஆசிரிய ஆலோசகருமான திரு. ஏ. எஸ். சத்தியசீலன், ஊரியன்கட்டுப் பிரவு பிரதேச சபை உறுப்பினர் திரு. இ. ஜினித்திரராசா ஆகியோர் கலந்து கொண்டனர்.

அத்துடன் கிராமத்தின் முக்கியஸ்தர்களும் கலந்து சிறப்பித்த இவ் விழாவானது மாணவர்களுக்கு மிக அவசியமன ஒன்றாக கருதப்படுகிறது. தட்டுமனைப் பிரதேசத்தில் மாணவர்களின் கல்வி நிலைமை மிகவும் பின்தங்கியே காணப்படுகின்ற போதிலும் இவ்வாறான நிகழ்வுகள் மாணவர்களுக்கு ஊக்கமளிக்கக் கூடியதாக அமைவதோடு கல்வி மீதான ஆர்வத்தையும் கொடுக்கும்.