மத்திய வங்கியின் ஆளுநர் இன்றுடன் ஓய்வு!


இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி இந்திரஜித் குமார சுவாமி இன்று தனது பதவியில் இருந்து ஓய்வு பெறவுள்ளார்.

அவர் நேற்று (19) மத்திய வங்கியின் அனைத்து பணியாளர்களையும் சந்தித்து தனது நன்றியை தெரிவித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

கடந்த ஜனாதிபதி தேர்தலுக்கு முன்னர் பதவி விலகுவதற்கு அவர் நிதி அமைச்சிடம் கோரிக்கை விடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

2016 ஆம் ஆண்டு ஜூலை மாதம் இலங்கை மத்திய வங்கியின் 14 ஆவது ஆளுநனராக கலாநிதி இந்திரஜித் குமாரசுவாமி பதவியேற்றார்.

2017 ஆம் ஆண்டில் தெற்காசியாவின் மத்திய வங்கி ஆளுநர் விருதினை அவர் பெற்றிருந்தமை விசேடம்ஷமாகும்.