புற்று நோயினால் பாதிக்கப்பட்ட தந்தையின் சடலத்துக்கு அஞ்சலி செலுத்திய பின்னர் பரீட்சை எழுதச்சென்ற மாணவன்




திருகோணமலை-மஹதிவுல்வெவ பகுதியில் புற்று நோயினால் பாதிக்கப்பட்ட தந்தையின் சடலத்துக்கு அஞ்சலி செலுத்திய பின்னர் பரீட்சை எழுதச்சென்ற சம்பவம் ஒன்று இன்று(2) இடம்பெற்றுள்ளது.

45 வயதுடைய நான்கு பிள்ளைகளின் தந்தையான டபிள்யூ. டீ. சமிந்த லசந்த என்பவர் சனிக்கிழமை அதிகாலை மஹரகம வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்

இந் நிலையில் அவரது சடலம் அவரது வீட்டுக்கு கொண்டு வரப்பட்டு இன்றைய தினம் நல்லடக்கம் செய்யப்பட வருகின்ற நிலையில் அவரது மூத்த மகன் சுபுன் தனன்ஞச (16வயது) இன்றைய தினம் கா. சாதாரண தரப் பரீட்சைக்குத் தோற்ருக்கின்றார்.

கா. சாதாரண தரப் பரீட்சைக்கு செல்வதற்கு முன்னர் அவரது தந்தையின் சடலத்துக்கு அஞ்சலி செலுத்தி கண்ணீர் வடித்து அவர் பரீட்சை எழுதும் மஹதிவுல்வெவ சிங்கள மகா வித்தியாலயத்திற்கு சென்றதையும் காணக்கூடியதாக இருந்தது.