தர்மலிங்கம் ஹரிதேவா அகில இலங்கை சமாதான நீதிவானாக சத்திய பிரமாணம்


(லியோன்)
தர்மலிங்கம் ஹரிதேவா அகில இலங்கை சமாதான நீதிவானாக சத்திய பிரமாணம் செய்து கொண்டார்.

இவர் 10/12/2019 ம் திகதி செவ்வாய் கிழமை மட்டக்களப்பு நீதிவான் நீதிமன்ற நீதிபதி முன்னிலையில் சத்திய பிரமாணம் செய்து கொண்டார்.

ஆரையம்பதி பிரதேசத்தை பிறப்பிடமாக கொண்ட இவர் தற்போது கல்லடியில் வசிப்பதோடு மட்டக்களப்பு மாவட்ட தேசிய போக்குவரத்து வைத்திய நிறுவகத்தின் பொறுப்பாளராகவும் கடமையாற்றி வருகின்றார்.

இவர் விளையாட்டு கழகங்கள், கிராமிய அமைப்புக்கள்,கோயில் நிருவாக அமைப்புக்கள் போன்றவற்றில் பல பதவிகளை வகித்தவர். பல சமூக சேவைகளில் ஈடுபாடு கொண்டவர்.

முன்னாள் அகில இலங்கை சமாதான நீதவானான தர்மலிங்கம் பாக்கியம் தம்பதிகளின் புதல்வரும் ,புனித மிக்கேல் கல்லூரியில் பழைய மாணவரும் ஆவார்.