திருகோணமலை இந்து கலாசார நிலையத்தில் உணவுத் திருவிழா !


(கதிரவன் ,எப்.முபாரக்)
திருகோணமலை மாவட்டத்திற்கான சுற்றாலத்துறை தொடர்பான திறன்விருத்தி மூலோபாய செயற்திட்டத்தின் கீழ், supreme Chef -2 உணவுத்திருவிழா இந்நிகழ்வின் உத்தியோக பூர்வ ஆரம்ப நிகழ்வு இன்று (20) ஆரம்பித்து வைக்கப்பட்டது.

திருகோணமலை மாவட்ட சுற்றாலத்துறை தொடர்பான திறன்விருத்தி மூலோபாய செயற்திட்டத்தின் பணிப்பாளர் எம். மதியழகன் தலைமையில் இது நடைபெற்றது.

இந்நிகழ்விற்கு அவுஸ்ரேலிய அரசாங்கத்தின் நிதி அனுசரணை உடன் " உள்வாங்கப்பட்ட வளர்சிக்கான திறன்கள் அபிவிருத்தி நிகழ்ச்சி திட்டம் " S4IG . (எஸ்.4 ஐ ஜி) அனுசரணை மற்றும் தொழில்நுட்ப ஆலோசனை வழங்கி இருந்தது.

இந் நிகழ்வில் உல்லா பயணிகளை கவரும் வகையில் பாரம்பரிய உணவுகள் மற்றும் அதனை தயாரிக்கும் முறை, பாரம்பரிய மருத்துவ முறைகள் , சிறு உற்பத்தி முறை போன்றன தொடர்பாக காட்சிப்படுத்தப் பட்டிருந்தது.
இந் நிகழ்வில் திருகோணமலை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் இளைஞர் யுவதிகள் கலந்து கொண்டார்கள்.

இந் நிகழ்வில் பிரதம அதிதியாக கிழக்கு மாகாண சமூக சேவைகள் திணைக்களப் பணிப்பாளர்,திருகோணமலை மாவட்ட திட்டமிடல் பணிப்பாளர் திருமதி பரமேஸ்வரன்,மற்றும் அவுஸ்திரேலியா எயிட் குழுத் தலைவர் டேவிட் சி அப்லெட்,ஜீடி தீபன் முகாமையாளர் ,சந்தைப்படுத்தல்,கமல நாதன் பிரதி குழுத் தலைவர் போன்றோரும் கலந்து கொண்டார்கள்.