பெண் மீது பெற்றோல் ஊற்றி எரிப்பு - குடும்ப மோதலில் இருவர் படுகாயம்!


(பாறுக் ஷிஹான்)
தாபரிப்பு பணக்கொடுக்கல் வாங்கல் காரணமாக ஏற்பட்ட குடும்ப மோதலில் இருவர் படுகாயமடைந்துள்ளனர்.


அம்பாறை மாவட்டம் கல்முனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சாய்ந்தமருது 6 ரீ.எம் வீதியில் வியாழக்கிழமை(9) அதிகாலை பெற்றோல் கலனுடன் திடிரென வீட்டினுள் உட்புகுந்த நபர் ஒருவர் அங்கு உறங்கிய பெண்ணை அழைத்து அவர் மீது பெற்றோல் ஊற்றி எரித்துள்ளார்.

இதனால் படுகாயமடைந்த குறித்த பெண் கல்முனை அஸ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலை அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கபட்டுள்ளார்.

இதே வேளை குறித்த எரிப்பு சம்பவத்தில் ஈடுபட்ட நபர் படுகாயமடைந்த நிலையில் கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார்.

இவ்வாறு அனுமதிக்கப்பட்ட நபரது கை வயறு எரிவு காயங்கள் காணப்படுவதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

குறித்த சம்பவம் தொடர்பில் கல்முனை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வரகின்றனர்.

குறித்த சம்பவத்தில் சாய்ந்தமருது-6 ரீ.எம் வீதியை சேர்ந்த கலந்தர் லெப்பை கமருன் நிஸா(வயது-42) என்ற தாயும் இப்றாகீம் உதுமாலெப்பை நிசார் (வயது-48) குடும்பஸ்தருமே பாதிக்கப்ட்டவர்களாவர்.

இருவரும் தம்பதிகள் எனவும் 7 பிள்ளைகளை கொண்ட இத்தம்பதியினர் ஒரு வருடத்திற்கு முன்னர் விவாகரத்து செய்த பின்னர் நீதிமன்றத்தில் அது தொடர்பான வழக்குகளை சந்தித்ததுடன் தாபரிப்பு பணம் செலுத்திய விடயம் ஒன்றில் ஏற்பட்ட முறுகல் காரணமாக இச்சம்பவம் இடம்பெற்றதாக தெரிவிக்கப்படுகிறது.