[NR]
தம்பிலுவில் தம்பிமுத்து வீதியில் அமைந்துள்ள குருதேவர் பாலர்பாடசாலையின் 2020ஆம் ஆண்டின் புதிய மாணவர்களை வரவேற்கும் நிகழ்வானது கடந்த 2020.02.15ம் திகதி சனிக்கிழமை பாடசாலையின் முகாமைத்துவ குழுவின் ஏற்பாட்டில் குருதேவர் பாலர்பாடசாலையின் முகாமைத்துவ பணிப்பாளர் பா .சந்திரேஸ்வரன் தலைமையில் பாடசாலையில் இடம்பெற்றது.
இந்நிகழ்வில் பிரதம அதிதியாக திருக்கோவில் பிரதேச செயலாளர் த.கஜேந்திரன் அவர்களும், ஆன்மீக அதிதியாக ஸ்ரீ சித்தி விநாயகர் ஆலய பிரதமகுரு சிவஸ்ரீ.கிருபாகரசர்மா ஐயா மற்றும் கிழக்கு மாகாண முன்பள்ளி பணியக வெளிக்கள உத்தியோகத்தர் பி.மோகனதாஸ் மற்றும் திருநாவுக்கரசு நாயனார் குருகுல பணிப்பாளர் கண.இராசரெத்தினம் ஆகியோர் கலந்து கொண்டார்.
மேலும் இன் நிகழ்வின் போது கடந்த வருடம் இப்பாடசாலையில் கல்வி கற்று இவ்வருடம் தரம் 1 ற்கு சென்ற மாணவர்கள் புதிய மாணவர்களை மாலைஅணிவித்து மலர்செண்டு கொடுத்து அன்பாக வரவேற்றனர். இதில் பாடசாலையின் ஆசிரியர்கள், புதிய மற்றும் பழைய மாணவர்களின் பெற்றோர்களும் கலந்து கொண்டனர்.
மேலும் இன் நிகழ்வின் போது கடந்த வருடம் இப்பாடசாலையில் கல்வி கற்று இவ்வருடம் தரம் 1 ற்கு சென்ற மாணவர்கள் புதிய மாணவர்களை மாலைஅணிவித்து மலர்செண்டு கொடுத்து அன்பாக வரவேற்றனர். இதில் பாடசாலையின் ஆசிரியர்கள், புதிய மற்றும் பழைய மாணவர்களின் பெற்றோர்களும் கலந்து கொண்டனர்.