பேருந்தில் சிக்குண்டு பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் பலி !

மஸ்கெலியாவில் இருந்து நல்லதன்னி நோக்கி பயணித்த தனியார் பேருந்தில்
பயணித்த பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் மவுசாகலை சோதனை சாவடியில் வைத்து பேருந்தின் பின் டயர் பகுதியில் சிக்குண்டு பலியாகியுள்ளதாக மஸ்கெலியா பொலிஸார் தெரிவித்தனர் இந்த சம்பவம் 20.02.2020.வியாழகிழமை இரவு 07 மணியளவில் இடம் பெற்றதாக மஸ்கெலியா பொலிஸார் தெரிவித்தனர்.குறித்த பொலிஸ் உத்தியோகத்தர் பொலிஸ் தினைக்களத்தின் வாழ்க்கை பாதுகாப்பு பிரிவில் பணியாற்றி வருவதாகவும் இன்றய தினம் நல்லதன்னியில் இருந்து மவுசாகலைக்கு சென்ற பேருந்தில் மவுசாகலை பகுதியில் வைத்து சிக்குண்டு பலியாகியுள்ளதாகவும் பலியான நபர் 40வயதுடைய நான்கு பிள்ளைகளின் தந்தையான கெப்படிபொல பகுதியை சேர்ந்த அஜித்வீரசூரிய என்ற பொலிஸ் உத்தியோகத்தரே இவ்வாறு பலியாகியுள்ளதாக பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரனைகளில் இருந்து
தெரியவந்துள்ளது.

சம்பவத்தில் பலியான பொலிஸ் உத்தியோகத்தரின் சடலம் மஸ்கெலியா
வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதோடு பேருந்தின் சாரதி கைது செய்யபட்டுள்ளதாகவும் 21.02.2020.வெள்ளிகிழமை பேருந்தின் சாரதி ஹட்டன் நீதவான் நீதிமன்றில் முன்னிலை படுத்தபட உள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரனைகளை மஸ்கெலியா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடதக்கது.