(வி.சுகிர்தகுமார்)
அக்கரைப்பற்று ஸ்ரீ இராமகிருஸ்ணர் இந்து அறநெறிப்பாடசாலையின் பொங்கல் விழாவும் கலை நிகழ்வும் பரிசளிப்பும் இன்று(16) அக்கரைப்பற்று ஸ்ரீ இராமகிருஸ்ண தேசிய பாடசாலையில் சிறப்பாக நடைபெற்றது.
அறநெறி ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள் இணைந்து ஏற்பாடு செய்த நிகழ்வில் ஆலையடிவேம்பு பிரதேச இந்துமாமன்ற தலைவர் சி.கனகரெத்தினம் உறுப்பினர் எஸ்.புண்ணியமூர்த்தி கலாசார உத்தியோகத்தர் திருமதி நிசாந்தினி தேவராஜ் எழுத்தாளர் திருமதி யோகேஸ்வரி கிருஸ்ணமூர்த்தி ஆசிரியர் சுதர்சன் மகளிர் அபிவிருத்தி சங்க தலைவி எஸ்.உதயமலர் உள்ளிட்ட அறநெறி ஆசிரியர்கள் மாணவர்கள் பெற்றோர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
கலாசார பாரம்பரிய நிகழ்வுடன் ஆரம்பமான பொங்கலிடும் நிகழ்வை தொடர்ந்து சூரிய பகவானுக்கான பூஜை வழிபாடுகள் இடம்பெற்றன.
தொடர்ந்து பாடசாலை ஒன்று கூடல் மண்டபத்தில் இடம்பெற்ற மாணவர்களின் கலை நிகழ்வுகளில் அறநெறி மாணவர்கள் கலந்து கொண்டு தமது திறமைகளை வெளிப்படுத்தினர். நிகழ்வின் இறுதியில் கலை நிகழ்வுகளில் கலந்து கொண்ட மாணவர்களுக்கு பரிசில்களும் வழங்கி வைக்கப்பட்டன.
. .
.
அதிகம் வாசிக்கப்பட்டவை - 7 நாட்கள்
LATEST NEWS
10/recent/recentPost
குற்றம் - CRIME NEWS
6/crime/block_4