கந்தளாயில் நெல் அறுவடை மும்முரம்

(எப்.முபாரக்)
கந்தளாய் பிரதேச செயலாளர் பிரிவில் பெரும்போக நெல் அறுவடை தற்போது மும்முரமாக ஆரம்பிக்கப்பட்டு நடைபெற்று வருகின்றன. இதன் பிரகாரம் கந்தளாய்,போட்டகாடு,மற்றும் பழையவெளி,தம்பலாகாமம் உள்ளிட்ட பல பகுதிகளில் நெல் அறுவடை நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன.

தனியார் நெல் விற்பனையாளர்கள் நெல்லை கொள்வனவு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர். கீரி சம்பா ஒரு மூடை 2,650 முதல் 2800 ரூபாயாகவும் நாடு ஒரு மூடை 2400 ரூபாய் அளவிலும் விலை போவதாக பிரதேச தகவல்கள் தெரிவிக்கின்றன. அறுவடை கூலியாக ஏக்கரொன்றுக்கு 8000 ரூபாய் வரை செலவிடப்படுகின்றன.

நெல்லின் விலை கடந்த போகத்தை விட இம்முறை இங்கு குறைந்துள்ளதாக பிரதேச விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.