311 பேர் கொரோனா தடுப்பு முகாம்களில் இருந்து வெளியேற்றம் !

கொரோனா தடுப்பு முகாங்களான புனானை மற்றும் கந்தகாடு ஆகிய முகாம்களில் கடந்த 14 நாட்களாக தடுத்து வைக்கப்பட்டு மருத்துவ கண்கானிப்பில் வைக்கப்பட்டவர்கள் எவ்விதமான நோய்த்தொற்றும் இல்லாத நிலையில் தங்களின் குடுப்பங்களுடன் இனைக்கும் பணி இன்று இரானுவத்தினரின் பஸ் மூலமாக புனானை முகாமில் இருந்து மத்தறை பகுதிக்கு இரண்டு பஸ்கள் மூலமாக 80 பேயரும் கொழும்புக்கு இரண்டு பஸ்கள் மூலமாக 125 பெயரும் கண்டிக்கு ஒரு பஸ் மூலமாக 33 பெயரும் இன்று 9.50 மணியளவில் பொலிஸ் பாதுகாப்புடன் இரானுவத்தினரால் அழைத்து செல்லப்பட்டுள்ளனர்.
கந்தக்காடு பகுதியில் இருந்து 108 பெயர்கள் இரானுவத்தினரினால் பொலிஸ் பாதுகாப்புடன் அழைத்துச்செல்லப்பட்டுள்ளதாக பொலிஸ் வட்டாரம் தெரிவிக்கின்றது. இன்றைய நிலமையினை பார்க்கும் போது இலங்கையின் நிலவரம் கொரோனா தொற்றின் தாக்கம் சற்று குறைந்துள்ளதாக அவதானிக்கமுடிகின்றது. உண்மையில் வெளிநாடுகளில் இருந்து வருகை தருகின்றவர்கள் தங்களை சுயதனிமைக்கு உட்படுத்திக்கொண்டு வைத்திய ஆலோசனைப்படி நடந்து கொள்வார்களானால் நாட்டில் எவ்வாறான பயங்கர பாதிப்புக்களையும் நாம் எதிர்நோக்கவேண்டியதில்லை.