ஊரடங்கை மீறிய 1,327 பேர் 24 மணி நேரத்தில் கைது

நேற்று (05) மாலை 6.00 மணி முதல் இன்று (06) காலை 6.00 மணி வரையான 24 மணித்தியால காலப்பகுதியினுள் பொலிஸ் ஊரடங்குச் சட்டத்தை மீறி நடந்து கொண்ட குற்றச்சாட்டில் 1,327 பேர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளதோடு, 312 வாகனங்களும் கைப்பற்றப்பட்டுள்ளன.

இதற்கமைய கடந்த மார்ச் 20ஆம் திகதி மாலை 6.00 மணி முதல் இதுவரையான காலப்பகுதியினுள் பொலிஸ் ஊரடங்குச் சட்டத்தை மீறி நடந்து கொண்ட குற்றச்சாட்டில் 14,795 பேர் கைது செய்யப்பட்டுள்ளதோடு, இக்காலப்பகுதியில் 3,665 வாகனங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்தது.

கொரோனா வைரஸ் தொற்றைக் கட்டுப்படுத்தும் வகையில் கடந்த 20ஆம் திகதி மாலை 6.00 மணி  முதல் நாட்டில் பொலிஸ் ஊரடங்குச் சட்டம் பிறப்பிக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.