சிசு சடலமாக மீட்பு !

டயகம – லிந்துலை அகரவத்தை பகுதியில் தெருவில் வீசப்பட்டிருந்த சிசுவின் சடலத்தை லிந்துல பொலீஸார் நோற்று சனக்கிழமை மாலை கண்டெடுத்துள்ளனர்.

டயகம பிரதான வீதியில் அகரகந்த தோட்டப் பகுதியில் வீதிக்கு அருகாமையில் இருந்து சிசுவின் சடலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

குறைமாதத்தில் இறந்து பிறந்த சிசுவின் சடலமாக இருக்கலாம் என பொலீஸார் தெரிவித்துள்ளனர்.

உடல்பாகங்கள் சிதைவடைந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளதாகவும், சடலம் தொடர்பான மேலதிக விசாரணைகளை லிந்துலை பொலீஸார் மேற்கொண்டு வருகின்றனர்.